search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி"

    • மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்தது.
    • நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது.

    கோலாலம்பூர்:

    13-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

    இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள 2 முறை சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று வலுவான ஸ்பெயினை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஸ்பெயின் அணியின் கையே ஓங்கி இருந்தது. முதலாவது நிமிடத்திலேயே ஸ்பெயின் கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணி வீரர் காப்ரி வெர்டெல் இந்த கோலை அடித்தார்.18-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை ஸ்பெயின் கேப்டன் ரபி ஆந்த்ரே கோலாக்கினார். இதனால் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    33-வது நிமிடத்தில் இந்திய அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரோஹித் இந்த கோலை அடித்தார். முதல் கோல் அடித்த காப்ரி வெர்டெல் 41-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் கோலடித்து தனது அணியின் முன்னிலையை அதிகரித்தார். 60-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை ரபி ஆந்த்ரே கோலாக மாற்றினார்.

    கடைசி 5 நிமிடங்களில் இந்திய அணிக்கு 3 பெனால்டி வார்னர் வாய்ப்புகள் கிட்டியது. ஆனால் அதனை கோலாக்க இந்திய வீரர்கள் எடுத்த முயற்சியை ஸ்பெயின் கோல்கீப்பர் கேப்லாடெஸ் அருமையாக தடுத்து நிறுத்தினார்.

    முடிவில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை சுவைத்து தனது பிரிவில் முதலிடம் வகிக்கிறது. 2-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் தென் கொரியாவை (4-2) வென்று இருந்தது.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    'டி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் 4-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து முதலாவது வெற்றியை தனதாக்கியது. அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்துடன் (3-3) டிரா கண்டு இருந்தது. இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியை சொந்தமாக்கியது.

    நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது. தனது பிரிவில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியா அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின்-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்து முன்னிலை.
    • 2-வது பாதி நேர ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 கோல்கள் அடித்தது.

    பெண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் கனடாவை எதிர்கொண்டது. இந்திய இளம் வீராங்கனைகள் கோல் கோலாக அடிக்க இந்தியா 12-0 என கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    அன்னு 4, 6 மற்றும் 39-வது நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்து அசத்தினார். திபி மோனிகா டோப்போ 21-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    மும்தாஜ் கான் 26, 51, 54 மற்றும் 60-வது நிமிடங்களில் என நான்கு கோல் அடித்தார். தீபிகா சோரங் 34, 50 மற்றும் 54-வது நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்தார்.

    போட்டி தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் அட்டாக்கிங் அணுகுமுறையை கையாண்டனர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அன்னு கோல் அடித்தார். தொடர்ந்து அட்டாக்கிங் அணுமுறையில் விளையாடிய போதிலும் முதல் கால் பகுதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.

    தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்கள் அடித்தனர். இதனால் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 4-0 என முன்னிலைப் பெற்றது.

    3-வது காலிறுதி நேரத்திலும் 4 கோல்களும், அதன்பின் கடைசி கால் பகுதி ஆட்டத்தில் 4 கோல்களும் அடித்தனர். இதனால் 12-0 என வெற்றி பெற்றனர்.

    இந்திய வீராங்கனைகள் நாளை ஜெர்மனியை எதிர்கொள்கின்றனர்.

    ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வரும் 24ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இன்று இந்தியா வந்து சேர்ந்தது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய வீரர்களை, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். தூதரகத்தில் பாகிஸ்தான் அணியினருக்கு இன்று மதிய விருந்து வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர், ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று கூறிய அவர், வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், திறமையுடனும் செயல்படுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.

    2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களை மத்திய திரும்பப் பெற்றதுடன்  மற்றும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவை அறிவித்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது.  காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    ஆனால், பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில், பாகிஸ்தானுடன் உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×